×

தொலைபேசி எண் அறிவிப்பு

தர்மபுரி, ஏப்.2: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் 19ம்தேதி நடக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு, கடந்த 16ம் தேதி முதல் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. இத்தேர்தலில் 24 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் காவல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என, தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் சம்பந்தமாக ஏதேனும் விதிமீறல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டும் என்றால், 63690 28922 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் அல்லது தொலைபேசி மூலமாகவும் புகார்களை தெரிவித்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தொலைபேசி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி