×

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

கோவை, ஏப்.2: கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பான புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் மைல்கல் பகுதியில் சோதனை நடத்தினர். பூங்கா பகுதியில் காரை நிறுத்தி அதில் மாத்திரைகளை விற்பனை செய்த ஈச்சனாரியை சேர்ந்த ஹரிகரன் (30), மனோஜ்குமார் (30), முதிஷ் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மாத்திரகைளை நீரில் கரைத்து அதை ஊசியாக பயன்படுத்தி வந்துள்ளனர். போதை மாத்திரை கும்பல் எங்கேயிருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்தது? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kuniyamuthur ,Milekal ,Harikaran ,Manoj Kumar ,Mutish ,Echanari ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...