×

அசாம் முதல் மகாராஷ்டிரா வரை ஊழல்வாதிகளை மோடி பாதுகாக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி தான் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஊழலுக்கு எதிராகப் போராடுகிறேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் அசாமில் இருந்து மகாராஷ்டிரா வரை ஊழலின் உரிமையை அவரே விநியோகிக்கிறார். மிகப் பெரிய ஊழல்வாதி என்று கூறியவரை பாஜ அலுவலகத்தில் பெரிய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார். ஈடி, ஐடி, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வசூல் ஏஜென்ட்களாக மாற்றி நன்கொடை பெற்று வரும் பா.ஜ., தற்போது ஊழல்வாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மோடி அரசு என்பது ஊழல்வாதிகளுக்கு மட்டுமே ‘பாதுகாப்பு உத்தரவாதம்’. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அசாம் முதல் மகாராஷ்டிரா வரை ஊழல்வாதிகளை மோடி பாதுகாக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Assam ,Maharashtra ,Rahul ,New Delhi ,Rahul Gandhi ,PM Modi ,Dinakaran ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...