×

கடையநல்லூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கடையநல்லூர்,ஏப்.2: தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூர் பஜனை மட தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமு (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிக்கு பிரகதி (3) என்ற பெண் குழந்தை உள்ளது. மாரீஸ்வரன் துபாயில் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்ற ராமு நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. வெளியில் குழந்தை பிரகதியும் அழுதுகொண்டே நின்றுகொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த ராமுவின் அத்தை ரேவதி அருகில் உள்ளவர்களை அழைத்து குளியல் அறை கதவை உடைத்து பார்த்த போது ராமு குளியல் அறையில் உள்ள மேற்கூரை கம்பியில் தூக்கிட்ட நிலையில் தொங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து ராமுவை மீட்டு ஆட்டோ மூலம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ராமுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து ராமுவின் செல்போனை கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமுவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகியுள்ளதால் அதற்கான காரணம் குறித்து தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விசாரணை நடத்தி வருகிறார்.

The post கடையநல்லூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Mariswaran ,Bhajanai Matha Street, Melakadayanallur, Tenkasi District ,Ramu ,Pragathi ,
× RELATED விஏஓவிடம் தகராறு செய்த இரண்டு பேர் கைது