×

விஜயதரணி கன்னத்தில் கை வைத்த பூசாரி: ஆசீர்வாதத்தில் இது புதுசு…

தேர்தல் வந்துவிட்டால் தலைவர்கள், வேட்பாளர்கள் கோயில்களிலும், தேவாலயங்களிலும், சமய தலைவர்களிடமும் சென்று ஆசிபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வதிபுரம்- பெருவிளை சாலையில் உள்ள இலுப்பமூடு இசக்கி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்த விஜயதரணியும் தரிசனத்தில் கலந்து கொண்டார்.

அவரும் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். கோயிலில் இருந்த பூசாரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னத்தில் முத்தமிட்டு முகத்தை தடவி ஆசீர்வாசம் வழங்கினார். அடுத்து நின்றிருந்த எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வுக்கும் முகத்தை தடவி கன்னத்தில் முத்தமிட்டு ஆசி வழங்கினார். அடுத்து நின்று கொண்டிருந்த விஜயதரணியின் கன்னத்தை தனது இரு கைகளாலும் அழுத்தி திருநீறு வழங்கி பூசாரி ஆசீர்வாதம் வழங்கினார். இதனை பார்த்த தொண்டர்கள் இது புதுவித ஆசீர்வாதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு கோயிலில் இருந்து தரிசனத்தை முடித்து பிரசாரத்தை தொடங்கினர்.

The post விஜயதரணி கன்னத்தில் கை வைத்த பூசாரி: ஆசீர்வாதத்தில் இது புதுசு… appeared first on Dinakaran.

Tags : Vijayadharani ,Kanyakumari ,Lok Sabha Constituency ,BJP ,Pon. ,Radhakrishnan ,Sami darshan ,Iluppamudu Isaki Amman temple ,Parvathipuram-Peruvilai road ,Vijayatharani ,
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல்...