×

ஏழைகளுக்கு மானிய விலையில் பீர், விஸ்கி: பெண் சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

மும்பை: ஏழைகளுக்கு மானிய விலையில் விஸ்கி, பீர் வழங்குவேன் என்று மகாராஷ்டிராவில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குறுதியை அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் தொகுதியில் வனிதா ராவத் என்ற வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தில், ‘என்னை தேர்ந்தெடுத்தால் கிராமத்தில் மதுக்கடைகளைத் திறப்பேன்.

ஏழைகளுக்கு மானிய விலையில் விஸ்கி, பீர் வழங்குவேன். ஏழைகள் கடின உழைப்பாளிகளாக உள்ளனர். அவர்கள் மதுவை குடிப்பதன் மூலமே நிம்மதி அடைகின்றனர். அவர்களால் தரமான விஸ்கி அல்லது பீர் வாங்கி குடிக்க முடியாது. அவர்களுக்கு தரமான இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். முன்னதாக 2019ம் நடந்த தேர்தலில், நாக்பூர் தொகுதியில் வனிதா ராவத் போட்டியிட்டு தோற்றார்.

The post ஏழைகளுக்கு மானிய விலையில் பீர், விஸ்கி: பெண் சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,MAHARASHTRA ,Vanita Rawat ,Chandrapur ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...