×

கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கண் கலங்கிய பிரேமலதா

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரம் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.அவர் பேசும்போது, விஜயகாந்த் மறைவுக்கு நீங்க எல்லாம் வந்திருந்தீங்க. இரண்டு நாள் யாருமே சாப்பிடாமலேயே டிவி முன்பு நீங்கள் காட்டிய அன்பு, பல மடங்கு.

கவலைப்படாதீங்க… விஜயகாந்த் விட்டுட்டு போயிட்டாரு என நினைக்காதீர்கள். உங்கள காப்பதற்கு நாங்கள் இருக்கிறோம். நான், என் இரண்டு மகன்கள் உங்களுக்காகவே இருப்போம். இனி ஒவ்வொரு தொண்டர்களுக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். அப்போது கூட்டத்தை பார்த்து பிரமேலதா கண் கலங்கினார்.

The post கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கண் கலங்கிய பிரேமலதா appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Kallakurichi ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,AIADMK ,Vanapuram ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...