×

பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி.. அன்புமணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு பதிலடி..!!

சென்னை: பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார். 1996-ல் ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சிக்கு உயிர்தந்ததாகவும், 2019-ல் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் பழனிசாமி முதல்வராக நீடித்திருக்க முடியாது என அன்புமணி பேசியிருந்தார். மேலும், ஆனால் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பழனிசாமி துரோகம் செய்து விட்டார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அன்புமணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

அன்புமணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு பதிலடி
பா.ம.க. தயவால்தான் அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றது. அதிமுக குறித்து விரக்தியில் அன்புமணி ராமதாஸ் பேசி வருவதாக செல்லூர் ராஜு குற்றச்சாட்டியுள்ளார். அதிமுகவுக்கு பா.ம.க. உயிர்கொடுத்ததாக கூறுவது கேலிக்கூத்தானது. பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி.

“பா.ம.க.வில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் இல்லை”
பா.ம.க.வில் சௌமியா அன்புமணி போட்டியிடும் தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

 

The post பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி.. அன்புமணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு பதிலடி..!! appeared first on Dinakaran.

Tags : Anbumani ,AAP ,Former ,Minister ,Sellurraju ,CHENNAI ,AIADMK ,Jayalalitha ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...