×

தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக எழுப்பியுள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக எழுப்பியுள்ளது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக எழுப்பியுள்ளது. கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மக்களை திசைத்திருப்ப முயற்சி செய்துள்ளார். தோல்வி பயத்தின் காரணமாக கலர் கலராக பொய் சொல்லி வருகின்றனர்.

கச்சத்தீவை கொடுக்க கூடாது என்று, கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். கச்சத்தீவுக்கு எதிராக தமிழகம் முழுவதும், திமுக கூட்டம் நடத்தியது, நானும் அப்போது பங்கேற்றேன். தமிழினத்தை அழித்த இலங்கை திவாலான போது, ரூ.34,000 கோடி கொடுத்தவர் பிரதமர் மோடி. இலங்கை திவாலான போது, கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே?. இலங்கை மின் பணிகளை அதானிக்கு வாங்கி கொடுத்ததற்கு பதிலாக, கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார்.

The post தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக எழுப்பியுள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,RS ,Chennai ,RS Bharati ,Lok Sabha ,DMK Organization ,RS Bharti ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...