×

ஏப்.3ம் தேதி முதல் வைகோ பிரசாரம்

சென்னை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார். இது குறித்து ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்:

ஏப்.3ம் தேதி- மாலை 5 மணி தென்சென்னை, இரவு 7 மணி ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.4ம்தேதி-மாலை 4 மணி வடசென்னை, 6 மணி மத்தியசென்னை, 6ம்தேதி- திருச்சியில் காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார், மாலை 4 மணி பெரம்பலூர், 6 மணி திருச்சி. 7ம்தேதி-மாலை 4 மணி சிதம்பரம், மாலை 6 மணி திருச்சி, 8ம்தேதி-மாலை 5 மணி தஞ்சாவூர்,

மாலை 6.30 மணி திருச்சி, 9ம்தேதி-திருச்சி, 10ம்தேதி-மாலை 4 மணி ராமநாதபுரம், மாலை 6.30 மணி மதுரை, 11ம்தேதி-விருதுநகர், 12ம்தேதி தூத்துக்குடி, 13ம்தேதி-தென்காசி, 15ம்தேதி ஈரோடு, திருப்பூர், 16ம்தேதி நீலகிரி, கோவையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஏப்.3ம் தேதி முதல் வைகோ பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,CHENNAI ,MDMK ,general secretary ,Tamil Nadu ,India Alliance ,DMK ,India ,VIGO ,Dinakaran ,
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...