×

ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பலாத்காரம்: கார் டிரைவர் அதிரடி கைது

மும்பை: மகாராஷ்டிராவில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உபேர் டிரைவர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் தாதர் மேற்கு பகுதியில் சேர்ந்த முகமது ஜலீல் கலீல் (33) என்பவர், ‘உபேர்’ நிறுவன கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த தனது உறவினர் வீட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் அன்பாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை தனது காரில் அழைத்து சென்று ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி அழைத்து சென்றார்.

தொடர்ந்து தாதர் மேம்பாலம் அருகே உள்ள தாழ்வான பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றார். அங்குள்ள மறைவான இடத்தில் வைத்து, அந்த சிறுமியை முகமது ஜலீல் கலீல் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு மீண்டும் அதே வீட்டில் விட்டுச் சென்றனர். வீட்டிற்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்த சம்பவம் தொடர்பாக தாதர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்பின் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை உறுதி செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முகமது ஜலீல் கலீலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பலாத்காரம்: கார் டிரைவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Uber ,Maharashtra ,Mohammad Jaleel Khaleel ,Dadar West, Maharashtra ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...