×

“வேலியே பயிரை மேய்ந்தது’’ கொடூர தந்தை பாலியல் தொல்லை 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை

அண்ணாநகர்: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்றுமுன்தினம் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது போலீசாரிடம் சிறுமி கூறியதாவது;
சொந்த ஊர் ராஜஸ்தான். அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோருடன் கடந்த 20 வருடமாக கோயம்பேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனது அப்பா அதே பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். துணிக்கடையில் தினமும் அப்பாவுக்கு உதவி செய்வேன். துணிக்கடையில் உள்ள குடோனில் வைத்து பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்தார். பிறகு என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அம்மா, அண்ணனிடம் இதுபற்றி தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். உயிருக்கு பயந்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன்.

அப்பாவின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து தினமும் துணிக்கடை குடோனில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.இவ்வாறு சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று வீட்டில் இருந்த சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். அப்போது அவர், பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதன்பின்னர் போக்சோ மற்றும் மிரட்டுவது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் கொடூர தந்தையை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post “வேலியே பயிரை மேய்ந்தது’’ கொடூர தந்தை பாலியல் தொல்லை 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை appeared first on Dinakaran.

Tags : Félie ,Annanagar ,Chennai Kalpakkam Government Hospital ,All Women's Police ,Inspector ,Umamakeshwari ,
× RELATED 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்