×

தெலுங்கானாவில் நிலப் பிரச்சனை தொடர்பாக சமரச பேச்சுவார்த்தைக்குச் சென்ற போலீசாரை பழங்குடி மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் நிலப் பிரச்சனை தொடர்பாக சமரச பேச்சுவார்த்தைக்குச் சென்ற போலீசாரை பழங்குடி மக்கள் விரட்டியடித்தனர். கம்மம் மாவட்டத்தில் சந்திராயபாலம் கிராமத்தில் தரிசு நிலம் தொடர்பாக பழங்குடியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தரிசு நிலம் தொடர்பாக ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த போலீசாரை ஒரு பிரிவினர் தடிகளைக் கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் துரத்திச் சென்று தாக்கியதை அடுத்து அலறியடித்துக் கொண்டு போலீசார் ஓடினார். தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post தெலுங்கானாவில் நிலப் பிரச்சனை தொடர்பாக சமரச பேச்சுவார்த்தைக்குச் சென்ற போலீசாரை பழங்குடி மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chandrayapalam ,Khammam district ,BARREN LAND ,Dinakaran ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...