×

மூணாறு அருகே ஓட்டலில் உணவு தேடிய படையப்பா யானை; இரவில் குடியிருப்புப் பகுதியில் சுற்றுகிறது

மூணாறு: மூணாறு அருகே தற்போது குடியிருப்புப் பகுதிகளில் படையப்பா யானை சுற்றித் திரிவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஓட்டலின் முன்பகுதிக்கு சென்று உணவு கிடைக்குமா என பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றது. மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித் திரியும் படையப்பா என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை சமீப நாட்களாக தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சுற்றித் தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக தேவிகுளம் பகுதியில் முகாமிட்டுள்ள படையப்பா யானை சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறிப்பதும் தொழிலாளர்களின் விவசாய நிலங்களில் உள்ள வாழை, காரட், முட்டை கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தும் வருகிறது.

இரவு பகலாக சுற்றி திரியும் இந்த யானையால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று நள்ளிரவு தேவிகுளம் டவுனில் நுழைந்த படையப்பா யானை, சாலை அருகே உள்ள ஹோட்டலின் முன்பு பரிசோதனை நடத்தி விட்டு தான் சென்றது. இது அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ளது. பெரிய சேதங்கள் ஒன்றும் கூறப்படவில்லை.அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் யானையை வனப் பகுதிகளுக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் படையப்பா உள்ளது என்று கூறப்பட்டாலும், இரவு நேரங்களில் யானையைக் கண்காணிப்பது சிரமமான காரியமாக உள்ளது. எனவே இரவு நேரங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சுதந்திரமாக உலா வரும் காட்டு யானை கண்ணில் படுவதை துவம்சம் செய்து வருகிறது.

The post மூணாறு அருகே ஓட்டலில் உணவு தேடிய படையப்பா யானை; இரவில் குடியிருப்புப் பகுதியில் சுற்றுகிறது appeared first on Dinakaran.

Tags : Munaru ,Sunaru ,Badajappa ,Dinakaran ,
× RELATED கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி