×

சிறுமி பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம், மார்ச் 30: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28).லாரி டிரைவர். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகியதாகவும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சிறுமி பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Jayangondam ,Manikandan ,Ariyalur district ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...