×

தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது

வேலாயுதம் பாளையம், மார்ச் 30: கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது .அதன் அடிப்படையில் தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (52) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thalavapalayam ,Velayuthampalayam ,Dalavapalayam ,Karur district ,Sub-Inspector ,Karunanidhi ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்