×

கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து பஸ்-பைக் மோதல் கூலித்தொழிலாளி பரிதாப பலி

கிருஷ்ணராயபுரம், மார்ச்30: கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசியில் பஸ்- பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மேட்டு திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (41). இவர் கூலி தொழிலாளி. நேற்று காலை கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி பகுதியில் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே திருச்சி மாவட்டம்,முசிறியை சேர்ந்த ரமேஷ்(44) என்பவர் குளித்தலையில் இருந்து கரூர் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி செல்லும்போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சந்தானம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து பஸ்-பைக் மோதல் கூலித்தொழிலாளி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Manavasi ,Tiruchi-Karur National Highway ,Santhanam ,Metu Thirukambulyur ,Karur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...