×

பட்டாசுகளுடன் சென்ற 2 வேன்கள் பறிமுதல்

விருதுநகர், மார்ச் 31: விருதுநகர்-சிவகாசி ரோடு ஆனைக்குட்டம் பெட்ரோல் பங்க் அருகில் ஆமத்தூர் எஸ்ஐ கணேசன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருத்தங்கலை சேர்ந்த ஜெயவேல்(37) ஓட்டி வந்த வேனில், உரிய உரிமம், அனுமதியின்றி தரைச்சக்கர வெடிகள் அடங்கிய 10 பெட்டி பட்டாசுகள் இருந்தது தெரியவந்தது. வேன், பட்டாசுகளை பறிமுதல் செய்து டிரைவர் ஜெயவேலிடம் விசாரித்து வருகின்றனர்.அதேபோல், விருதுநகர்-சிவகாசி ரோடு ஏ.மீனாட்சிபுரம் அருகில் ஆமத்தூர் எஸ்ஐ தங்கேஸ்வரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருத்தங்கல் ஆறுமுச்சாமி(22) ஓட்டி வந்த வேனில் உரிமம் எதுவும் இன்றி 192 ஹெலிகாப்டர் வெடிகள் அடங்கிய இரு பெட்டிகள் இருந்தன. பட்டாசுகள், வேனை பறிமுதல் செய்து ஆமத்தூர் போலீசார் ஆறுமுகச்சாமியிடம் விசாரித்து வருகின்றனர்.

The post பட்டாசுகளுடன் சென்ற 2 வேன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Ammatur SI Ganesan ,Sivakasi Road ,Petrol Punk ,Jaivel ,Trithangala ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...