×

மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு

போடி, மார்ச், 31: போடி அருகே சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் மொட்டையம்மாள் (என்ற) பஞ்சவர்ணம் (82). இவர் மகன் லட்சுமணனுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து லட்சுமணன் அப்பகுதியில் தேடிச் சென்றார். அப்ேபாது தனியார் தோட்டத்தில் இருந்த கிணற்றின் அருகே பஞ்சவர்ணத்தின் செருப்பு கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் போடி தாலுகா காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Mottaiyammal ,Panchavarnam ,Chillamarathupatti Netaji Street ,Lakshmana ,Lakshmanan ,Mudhati ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்