×

விஏஓ வீட்டில் 25 பவுன் கொள்ளை

திருப்புவனம், மார்ச் 31: திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற விஏஓ கஜேந்திரன். இவர் போலீஸ் ஸ்டேசன் அருகே வசித்து வருகிறார். இவரது மனைவி அபிராமி,மகன் ஆகியோர் கடந்த மாதம் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கஜேந்திரன் மருத்துவமனையில் உள்ளவர்களுடன் தங்கி உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு சென்ற கஜேந்திரன், நேற்று முன்தினம் திறக்க முற்பட்ட போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவையும் உடைத்து 25 பவுன் நகைகளையும், ரொக்கம் 50ஆயிரமும் திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். திருப்பாச்சேத்தி போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து, போலீசார் விசாரணை செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

The post விஏஓ வீட்டில் 25 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : VAO house ,Tiruppuvanam ,VAO ,Gajendran ,Tiruppachetty ,Abhirami ,Madurai ,Dinakaran ,
× RELATED விஏஓவிடம் தகராறு செய்த இரண்டு பேர் கைது