×

சாயல்குடி அருகே கரை ஒதுங்கிய டால்பின்

சாயல்குடி, மார்ச் 31: சாயல்குடி அருகே இறந்து கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் புதைத்தனர். சாயல்குடி அருகே வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கீழக்கரை மன்னர் வளைகுடா வனச்சரக அலுவலர்கள் செந்தில்குமார், கனகராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இறந்த டால்பினை ஆய்வு செய்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அந்த அரிய வகை டால்பின் 4 அடி நீளமும் 70 கிலோ எடை கொண்டது. இரண்டு வயது குட்டி டால்பின் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் காலநிலை மாற்றம் அல்லது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள பவளப் பாறை உள்ளிட்ட கடல்பாறைகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து ஏர்வாடி கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்து இறந்த நிலையில், இருந்த டால்பினை கடற்கரையோரம் குழி தோண்டி புதைத்தனர்.

The post சாயல்குடி அருகே கரை ஒதுங்கிய டால்பின் appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Valinokkam Gulf of Mannar ,Dinakaran ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...