×

பழக்கடையில் எடை மிஷினை திருடியவர் கைது

தர்மபுரி, மார்ச் 31: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (38). இவர் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் அருகே, பூ மற்றும் பழக்கடை வைத்துள்ளார். கடந்த 28ம் தேதி இரவு, வியாபாரம் முடித்துக்கொண்டு கடையை தார்பாய் வைத்து மூடி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. கடையில் இருந்த ₹5 ஆயிரம் மதிப்பிலான எடை மிஷினை மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி பொம்மிடி போலீசில் பழனிவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், பொம்மிடி வினோபாஜி தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் மிஷினை திருடிச்சென்றது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழக்கடையில் எடை மிஷினை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Palanivel ,Bommidi ,Dharmapuri district ,Pommidi railway station ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...