ஈரோடு, மார்ச் 31: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்த தாளவாடி, ஓசூர் நாயக்கர் வீதியை சேர்ந்த குமார் (37),திப்பு சர்க்கில் பகுதியை சேர்ந்த கலிமுல்லா (42), அந்தியூர் ராமச்சந்திரன் (35),பவானி ராஜேந்திரன் (60),கோபி அயலூர் சுப்பிரமணியம் (40), ஈரோடு, வில்லரசம்பட்டி கலையரசன் (36), ராமநாதபுரம் மாவட்டம்,ஆரக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (25),கோபி சின்னமொடச்சூர் கோடீஸ்வரன் (40), பெருந்துறை அடுத்துள்ள திங்களூர் பழனி (49) உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சட்டவிரோத மது விற்பனை 18 பேர் கைது appeared first on Dinakaran.