×

போலி மதுபான ஆலையில் 3,020 லிட்டர் ஸ்பிரிட் 500 மது பாட்டில் பறிமுதல்

*சிங்கம்புணரி அருகே பரபரப்பு

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார், 3,020 லிட்டர் ஸ்பிரிட், 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ளது குமரத்தகுடிப்பட்டி. இந்த ஊரில் அனுமதியில்லாமல் மதுபானம் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகங்கை மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ஏடிஎஸ்பி பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார், கிராமத்துக்கு சென்று நேற்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மதுபானம் தயாரித்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய சோதனையில், ஆலையில் குவார்ட்டர் பாட்டில் லேபிள், மூடி, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், 3,020 லிட்டர் ஸ்பிரிட், 500க்கும் மேற்பட்ட போலி மதுபாட்டில்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்ெபாருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமசாமி மனைவி மங்களம்(45) என்பவரை விசாரணைக்காக போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சிங்கம்புணரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போலி மதுபான ஆலையில் 3,020 லிட்டர் ஸ்பிரிட் 500 மது பாட்டில் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Singampunari Singampunari ,Singampunari ,Kumarathakudipatti ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...