×

திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

 

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 29: திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா நிறைவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 15ம் தேதி பங்குனி உத்திர விழா தொடங்கியது. 24ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து முருக பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பிரதான வீதிகள் வழியாக உலா வந்து கோயில் முன்பாக பரப்பப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பங்குனி உத்திர விழா நிறைவை முன்னிட்டு வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு முன் மண்டபத்தில் நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Thirukkatupalli Murugan Temple ,Thirukkatupally ,Thirukkalyanam ,Panguni Uthra festival ,Thandayuthapani Swamy Temple ,Tirukkatupalli ,Thirukkattupalli Murugan Temple ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு