×

கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

 

கரூர், மார்ச் 29: கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், குப்பம் கிராமத்தில் அமையவுள்ள மூன்று சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், குப்பம் கிராமத்தில் 3.4.2024 மற்றும் 5.4.2024 அன்று முறையே மனோஜ் பிரபாகர் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி, செல்வ விநாயகா ப்ளூ மெட்டல் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி மற்றும் சத்யா சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி ஆகியவற்றின் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் 2024, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மேற்கண்ட குவாரிகளின் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தங்கவேல் தெரிவித்துள்ளார்.

The post கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Kuppam village ,Buklur circle ,Karur district ,Kuppam Village, Karur District, Bukhalur Circle ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...