- உ.பி.
- முதல்வர்
- யோகி
- லக்னோ
- முதல் அமைச்சர்
- யோகி ஆதித்யநாத்
- பாஜக
- முசாபர்நகர் மாவட்டம்
- உத்திரப்பிரதேசம்
லக்னோ: ஒரு ஓட்டு நாட்டின் தலைவிதியை மாற்றிவிடும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பா.ஜ செயல்வீரர்கள் மாநாட்டில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது; உங்கள் ஒரு வாக்கு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு ஓட்டு எப்படி நாட்டின் தலைவிதியை மாற்ற முடியும்.
உங்கள் வாக்குகளில் ஒன்று தவறான கைகளுக்கு சென்றபோதெல்லாம், ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் இருக்கும், உங்கள் ஒரு வாக்கு சரியான அரசியல் கட்சிக்கு சென்றால், அராஜகம் முடிவுக்கு வந்து நம்பிக்கைக்கு மரியாதை கிடைக்கும். இன்று ராமர் அவர் பிறந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
முந்தைய அரசுகள் இந்த வேலையை செய்திருக்குமா? இன்று நாம் ஒரு புதிய சூழலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அந்த ஒரு வாக்கு தவறான இடத்திற்கு சென்ற போதெல்லாம், கப்பம் வாங்கப்பட்டது, ஆனால் அது சரியான கட்சிக்கு, சரியான கைக்கு சென்றபோது, அதன் விளைவு இப்போது பணம் பறிப்பு முடிந்துவிட்டது. பா.ஜவுக்கு தேசம் மட்டுமே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஒரு ஓட்டு நாட்டின் தலைவிதியை மாற்றும்: உ.பி முதல்வர் யோகி சொல்கிறார் appeared first on Dinakaran.