×

புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மார்ச் 28: புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் புதுக்கோட்டை மையமும் புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கமும் இணைந்து புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் அகில இந்திய கட்டுனர் சங்க தலைவர் தாமரைசெல்வன் தலைமை தாங்கினார். கட்டிட பொறியாளர் சங்க தலைவர் பொறியாளர் ரமேஷ் வரவேற்றார். நிகழ்வின் நோக்கம் குறித்து காஜா மைதீன் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கவிஞர் தங்கமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி சதக்கத்துல்லா உலவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் அகில இந்திய கட்டுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் பொறியாளர் முத்துக்குமார், வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், முக்கிய தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நோன்பு துறந்தனர். முடிவில் கட்டிட பொறியாளர் சங்க செயலாளர் நன்றி கூறினார்.

The post புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai Center ,All India Builders Association ,Pudukottai Building Engineers Association ,Iftar ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...