×

தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது

தோகைமலை, மார்ச்28: தோகைமலை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகம் கொசூர் ஊராட்சி கம்புளியாம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி ராசம்மாள் (60). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள முள்காட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தோகைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ராசம்மாள் மதுபாட்டில்களை முள் காட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ராசம்மாளையும் கைது செய்தனர்.

The post தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது appeared first on Dinakaran.

Tags : Mulgat ,Thokaimalai ,Palaniappan ,Kambuliambatti, Karur District ,Thokaimala Police Station ,Kosur Panchayat ,Rasammal ,Tokaimalai ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...