×

வடக்கஞ்சேரி அருகே காங்கிரஸ் வேட்பாளரின் பிளக்ஸ் பேனர் எரிப்பு

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை அருகே காங்கிரஸ் வேட்பாளரின் பிளக்ஸ் பேனரை சமூகவிரோதிகள் எரித்து நாசப்படுத்தினர். கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்.26ம் தேதி இரண்டு கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நடக்கிறது. இதில், ஆலத்தூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் இரண்டாவது முறை போட்டியிடுகிறார்.

பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை அடுத்த கிழக்கஞ்சேரி குண்டுக்காடு சென்டரல் பகுதியில் வங்கி கட்டடம் அருகே காங்கிரஸ் கொடிமரத்தின் கீழ் பகுதியில் ஆலத்தூர் நாடாளுமன்ற தொகுதி ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ரம்யா ஹரிதாஸின் கை சின்னம் கொண்ட, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.இதை சில சமூக விரோதிகள் எரித்து நாசப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வடக்கஞ்சேரி தேர்தல் கமிட்டி கண்வீனர் இஸ்மாயில் மூப்பன் வடக்கஞ்சேரி போலீஸ் ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வடக்கஞ்சேரி அருகே காங்கிரஸ் வேட்பாளரின் பிளக்ஸ் பேனர் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Vadakancheri ,Palakkad ,Palakkad district ,Kerala ,Aladhur ,Separate ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்