×

கடலூரில் பரிதாபம் ஆட்டோ மீது லாரி மோதல் டிரைவர் உள்பட 2 பேர் பலி

*பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

கடலூர் : ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் ரவி(53). இவரது மனைவி சரஸ்வதி (35). ரவிக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை செய்வதற்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (65) என்பவர் ஓட்டி சென்றார்.

நேற்று அதிகாலை கடலூர் செம்மண்டலம் குண்டு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ரவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகம் மற்றும் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூரில் பரிதாபம் ஆட்டோ மீது லாரி மோதல் டிரைவர் உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Parithapam Auto ,Cuddalore ,Karamanikkuppam ,Paritapam Auto ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை