×

ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு!!

ஈரோடு : ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் நேற்று பண்டல் பண்டலாக சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. காலிங்கராயன்பாளையத்தில் ரவிச்சந்திரன் என்பவரின் கிடங்கில் பண்டல் பண்டலாக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.161 பண்டல்களில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

The post ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : EROD ,ASHOKUMAR ,Erode ,Erode Lok Sabha Constituency Supreme Candidate Energy ,Asokumar ,Bandal Bandal ,Ravichandran ,Kalingarayanpalayam ,Erode Lok Sabha Constituency ,Supreme ,Dinakaran ,
× RELATED சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண...