×

பேருந்தில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி: தஞ்சையில் அரசு பேருந்தின் நடத்துனர் மீது சரமாரித் தாக்குதல்

தஞ்சை: தஞ்சையில் அரசு பேருந்து நடத்துனரை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயணிகளை யார் முதலில் ஏற்றுவது என்பதில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு, தனியார் பேருந்து ஓட்டுநருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அப்போது முந்தி செல்ல முற்பட்ட தனியார் பேருந்துக்கு அரசு பேருந்து ஓட்டுநர் இடம் தராததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அரசு பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் இருவரையும் சமாதானம் செய்துள்ளார். ஆனால் அரசு பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன் நடத்துனர் சசிகுமார் ஆகியோர் மாரியப்பனை நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டி கடுமையாக தாக்கினர். இது குறித்து மாரியப்பன் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தனியார் பேருந்து ஊழியர்கள் மணிகண்டன், சசிகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post பேருந்தில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி: தஞ்சையில் அரசு பேருந்தின் நடத்துனர் மீது சரமாரித் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : BOTA competition ,Thanjavur ,Pattukottai ,Tanjore ,BOTA ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021...