×

செங்கல்பட்டில் தலையில் பொம்மை விமானத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நபரால் பரபரப்பு

செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பழனியப்பன்(63) இவர் தர்மபுரி மாவட்டம் மஞ்சவாடிகனவாய் பகுதியை சேர்ந்தவர். 8வழி சாலை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலர் (செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்) அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக, அதிமுக, நா.த.க, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில் சுயேட்சை வேட்பாளள் ஒருவர் தலையில் பொம்மை விமானத்தை வைத்துக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைந்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனவே மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்க கோரி வேட்பாளர் பழனியப்பன் தலையில் பொம்மை விமான நிலையம் வைத்துக்கொண்டு வேட்பு மனு தாக்க செய்ய வந்ததால் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டில் தலையில் பொம்மை விமானத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Palaniappan ,Sriperumbudur parliamentary seat ,Manjavadikanavai ,Dharmapuri district ,Sriperumbudur Parliamentary Constituency Election Officer ,Chengalpattu District Collector ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!