×

திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ வேட்பாளர் உணர்ச்சி ததும்ப பேச்சு: “தந்தை” என குறிப்பிட்டதால் கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: திண்டுக்கல் கூட்டத்தில் தன்னை தந்தை என கூப்பிட்ட வேட்பாளர் முபாரக்கின் பேச்சை கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண் கலங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்தொகுதி வேட்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டமானது அங்குள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய முபாரக் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தனக்கு தாயும், தந்தையுமாக இருப்பதாக உணர்ச்சி ததும்ப பேசினார். இதனை கேட்டதும் கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன் விம்மியபடி கண்ணீர்விட்டார். திண்டுக்கல் சீனிவாசன் பின்னர் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கூட்டத்தில் சிறிது நேரம் அமைதியான சூழ்நிலை நிலவியது.

 

The post திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ வேட்பாளர் உணர்ச்சி ததும்ப பேச்சு: “தந்தை” என குறிப்பிட்டதால் கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : Dindigul Srinivasan ,STBI ,Dindigul ,Former ,AIADMK ,minister ,Mubarak ,Dindigul Constituency ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்