- இப்தார்
- Tirupporur
- கோவலம்,
- தமிழ்நாடு தர்காஹ்ஸ் ஜமாஅத்
- ரமலான்
- சிக்கந்தர்
- நிலை
- ஜனாதிபதி
- தமிழ்நாடு தர்காஸ் ஜமாஅத்
- கோவளம்
திருப்போரூர்: கோவளத்தில், தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் சார்பில் சமத்துவ நல்லிணக்க ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைப்பின் மாநில இணை தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் திலாவர் அலி கலந்துகொண்டு, இப்தார் நோன்பு திறப்பை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர். அப்போது, அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
The post கோவளத்தில் இப்தார் நோன்பு திறப்பு appeared first on Dinakaran.