×

திமுக, அதிமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்..!!

சென்னை: தென் சென்னையில் போட்டியிட அனைத்து கட்சி வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். திமுக, அதிமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசுபதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திண்டுக்கல் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் -மாணிக்கம் தாகூர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பேராசிரியர் இராம சீனிவாசன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆரணி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கனேஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சி.என் அண்ணாதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

The post திமுக, அதிமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Adimuka ,Pa. J. ,Tamil Party ,Chennai ,South Chennai ,Dimuka Treasurer ,Sriprahumudur ,D. R. Balu ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...