×

மதிமுக எம்.பி. தற்கொலை முயற்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை குமாரவலசு பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (77). ஈரோடு எம்.பி. இவர் மதிமுக மாநில பொருளாளராக உள்ளார். இவர் நேற்று ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அவரை பார்க்க நேற்று காலை 9.30 மணி அளவில் அவரது மகன் கபிலன் சென்றார். அப்போது கணேசமூர்த்தி வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக கணேசமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, அந்த ஆம்புலன்ஸ் மூலமாக மதியம் 2.30 மணிக்கு கணேசமூர்த்தி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்பி கணேசமூர்த்தி விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மதிமுக எம்.பி. தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Madhyamik ,Erode ,Ganesamurthy ,Avalpoonthura Kumaravalasu ,Erode district ,MDMK ,Periyar Nagar, ,M.P. ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில்...