×

அது வேற வாய்… இது நாற வாய்…சிக்கினார் ‘பொய்களின் மன்னன்’

‘பொய்களின் மன்னன்’ என்று நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தலைவர்களால் அழைக்கப்படும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஏதாவது ஒரு பொய் சொல்லி மாட்டிகிவாரு… பல பொய்களை சொல்லி சிக்கிய அண்ணாமலையின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, ‘புதுபாத, புது ரத்தம், புது எழுர்ச்சி வேணும் சார். தமிழ்நாட பொருத்தவரைக்கும் கிரேட் ஸ்டேட், டவுட்டே இல்ல.

நீங்க கேட்ட கேள்வி. எல்லா இண்டிகேட்டர்ஸ்லையும் முன்னாடி இருக்கோம். டவுட்டே இல்ல. படித்த மக்கள் அதிகம் இருக்கும் ஸ்டேட், டவுட்டே இல்ல. பட் நா வந்து தமிழ்நாட்டை பீகாருக்கோ, உ.பிக்கோ, மிசோரமிக்கோ கம்பேர் பண்ணல. நான் வந்து தமிழ்நாட்டை பிரான்சுக்கோ, பெல்ஜியத்திற்கோ, ஸ்வீடனுக்கோ கம்பேர் பன்றன். ஏனா நம்ம கம்பேரிசன் அங்க இருக்கணும். நம்ம ஆல் ரெடி வளர்ச்சி அடைஞ்சி இருக்கோம். நெக்ஸ்ட் லெவலுக்கு போகணும்.

நாம வளர்ச்சியடைச்சிட்டோம்னு இதே குட்டைகுள்ள இருக்க முடியுமானுதான் நான் கேக்குறேன். தயவு செஞ்சி தப்பா நெனைக்காதீங்க… தமிழ்நாடு மிச்ச ஸ்டேட்டோட கம்பேர் பண்ணும் போது எப்போதும் முன்னாடி இருந்து இருக்கு. எப்புமோ முன்னாடி இருக்கு. நீங்க 1970ல இருந்து ஒன்னு ஒன்னா பாத்தோம்னா, நாம எப்போதும் முன்னாடி இருக்கோம், அதுல எனக்கு மாற்றுக்கருத்து இல்ல…’ என்று கூறி உள்ளார்.

உண்மை நிலவரத்தை ஒப்புக்கொண்ட அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு பாஜ எதையும் செய்யாததால் எப்படி ஓட்டு கேட்பது என தெரியாமல் இப்போ அப்படி யேமாத்தி தமிழ்நாடு வளர்ச்சியே அடையவில்லை என்று கூறி கட்சிக்கு விஸ்வாசத்தை காட்ட ஜிங் ஜக் அடித்து வருகிறார் என்று மேற்கண்ட பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஐடி விங்க் டீம்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

The post அது வேற வாய்… இது நாற வாய்…சிக்கினார் ‘பொய்களின் மன்னன்’ appeared first on Dinakaran.

Tags : BJP ,president ,Annamalai ,King of ,
× RELATED பெண் கொலையில் அவதூறு அண்ணாமலை மீது வழக்கு