×

ஹோலி பண்டிகை கட்சித்தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஹோலி பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்புமணி(பாமக தலைவர்) : வண்ணங்களின் திருநாளான ஹோலி திருநாள் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதிலும், உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. வெற்றி , மகிழ்ச்சி, கொண்டாட்டம் ஆகியவற்றின் அடையாளம் தான் ஹோலி திருநாள். மக்களின் வாழ்க்கையில் எல்லா நாளும் அமைதி, நலம், மகிழ்ச்சி, வெற்றி, வளமை, கொண்டாட்டம் ஆகியவை நிறைந்திருக்க வேண்டும் என்று கூறி இந்த நாளில் ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் வண்ணமயமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமதாஸ் (பாமக நிறுவனர்) : தீமையை நன்மை ஒழித்து வெற்றி கண்டதன் கொண்டாட்டம் தான் ஹோலி திருநாள். தமிழ்நாட்டிலும் தீமைகளை ஒழித்து நன்மைகள் வெற்றி காண வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது வண்ணங்களின் திருநாளான ஹோலியை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடிகளை தூவி விளையாடுவது மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் கோலாகலமான பண்டிகை ஹோலி பண்டிகை. இதன் முக்கியத்துவமே ஆன்மிகப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான். எனவே ஹோலி பண்டிகையை கொண்டாடும் அனைவரும் இன்புற்று, மகிழ்வுடன் வாழ்வதற்கு இப்பண்டிகையானது புத்தொளி ஏற்படுத்திக்கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். ஹோலி பண்டிகையை கொண்டாடும் அனைவரும் வாழ்வில் சிறந்து மேம்பட வாழ்த்துகள்.

 

The post ஹோலி பண்டிகை கட்சித்தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Holi ,Chennai ,Anbumani ,Bamaga ,President ,India ,Tamil Nadu ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...