×

மாமல்லபுரத்தில் ஆந்திர உணவு கண்காட்சி

 

மாமல்லபுரம், மார்ச். 24: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான ஆந்திர உணவு கண்காட்சி நடைபெற்றது. மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள போர் பாயிண்ட் ஷெரட்டான் ரிசார்ட்டில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக, ஆந்திரா மேற்கு கோதாவரி ருச்சுலு உணவு கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. இதில் பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த், ரிசார்ட்டில் தங்கி உள்ள பயணிகள் கலந்து கொண்டு உணவு கண்காட்சியினை பார்வையிட்டனர்.

கண்காட்சியில், ஆந்திராவின் பாரம்பரிய அசைவ, சைவ உணவுகள், தானியங்கள், பயறு வகைகள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக, ஆந்திர மக்கள் காரம், புளிப்பு வகை உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதனால் காரம், புளிப்பு கலந்த உணவு வகைகள் அதிகளவில் இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன. இந்த உணவு வகைகள் பழங்கால மண் பானைகளில் சமைத்து காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.

பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து, பழங்கால முறையில் தானியங்கள் அனைத்தும் மூங்கில் முரத்தில் காட்சி படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பயணிகள் பலர் விதவிதமான உணவு வகைகளை சாப்பிட்டு ருசி பார்த்தனர். பின்னர், ஆந்திர உணவுகள் தயாரிக்கும் முறைகளை பார்வையிட்ட பயணிகள் அங்கு மண் சட்டியில் இருந்த சைவ, அசைவ உணவுகளை தங்களது செல்போனில் படம் பிடித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

The post மாமல்லபுரத்தில் ஆந்திர உணவு கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Andhra Food Fair ,Mamallapuram ,Andhra West Godavari Ruchulu Food Fair ,War Point Sheraton Resort ,Mamallapuram ECR Road ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...