×

குடும்ப பிரச்னையில் மூதாட்டி விஷமருந்தி தற்கொலை

மயிலாடுதுறை, மார்ச் 24: மயிலாடுதுறை அருகே சேர்ந்த குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி மல்லிகா (56). இவர் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 4ம் தேதி காலை 5 மணிக்கு தனது வீட்டில் இருந்த விஷ பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்ப பிரச்னையில் மூதாட்டி விஷமருந்தி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Anbazagan ,Mallika ,Kudi Vadapathi Street ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...