×

பாஜவினர் மீது போலீசில் புகார்

தர்மபுரி, மார்ச் 24: தர்மபுரி அருகே செட்டிக்கரை விஏஓ தாமோதரன், தர்மபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி கட்சி சின்னங்கள், கட்சி கம்பம் வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் அகற்றவில்லை என தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றில், அதிமுக கட்சி சின்னம் வரையப்பட்டிருந்தது தொடர்பாக சிறப்பு எஸ்ஐ வேலன், காரிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அனுமந்தபுரத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாஜவினர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Dharmapuri ,Damodaran ,VAO ,Chettikarai ,Bharatiya Janata Party ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி