×

கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் கடத்திய நபர் கைது

 

திருவனந்தபுரம்,மார்ச் 23 : அபுதாபியிலிருந்து கோழிக்கோடு வந்த பயணியிடமிருந்து ரூ. 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை போலீசார் கைப்பற்றினர். அபுதாபியிலிருந்து கோழிக்கோடு வரும் விமானத்தில் ஒருவர் தங்கம் கடத்துவதாக மலப்புரம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நபரை பிடிப்பதற்காக போலீசார் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர் பயணிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.  அப்போது தங்களுக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகமுள்ள ஒரு நபரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட சோதனையில் அவரிடமிருந்து தங்கம் எதுவும் சிக்கவில்லை.

பின்னர் நடத்திய தீவிர சோதனையில் அந்த நபர் உடலுக்குள் ரகசியமாக தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை கலவையாக்கி அதை 3 கேப்சூல்களில் அடைத்து உடலில் மறைத்து வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மொத்தம் 859 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.54 லட்சமாகும். விசாரணையில் அவர் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் முனீர் என்பது தெரியவந்தது.

The post கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் கடத்திய நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kozhikode airport ,Thiruvananthapuram ,Abu Dhabi ,Kozhikode ,Malappuram District SP ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!