×

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு சிறப்பு காவல்துறை மற்றும் பொது பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் தகவல்

 

சென்னை, மார்ச் 23: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு சிறப்பு காவல்துறை மற்றும் பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வருகிற ஏப்.19ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியது.

தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கு தேர்தல் சிறப்பு பொது மற்றும் காவல்துறை பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொது பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளும், காவல்துறை பார்வையாளர்களாக ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு சிறப்பு காவல்துறை மற்றும் பொது பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,Puducherry… ,Dinakaran ,
× RELATED நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர்...