×

வாகன சோதனை 5 கிலோ தங்கம் பிடிபட்டது

மக்களவை தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை பெரம்பூர் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் பாலகாட்டிற்கு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் எடுத்து செல்வது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

The post வாகன சோதனை 5 கிலோ தங்கம் பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Election Standard Monitoring Team ,Kalalakurichi Bypass Road ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு