×

ஒசூர், கிருஷ்ணகிரியில் 4 தாலுகாக்களுக்கு மார்ச் 25ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த்திருவிழா வருகிற 25ந் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஒசூர் வீரசைவ மரபினரால் கொடியேற்றத்துடன் (மார்ச்19)அன்று விழா தொடங்கியது. நிகழ்ச்சியின்போது சாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் மகாதீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல்.6ம் நாள் பணி நாள் என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்துள்ளார்.

The post ஒசூர், கிருஷ்ணகிரியில் 4 தாலுகாக்களுக்கு மார்ச் 25ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hosur, Krishnagiri ,Krishnagiri ,Hosur ,Choolagiri ,Dhenkanikottai ,Anchetty ,Sri Chandra Sudeshwarar Hill Temple ,Hosur, Krishnagiri district ,Osur ,Veerashaiva Maraphim ,Osur, Krishnagiri ,
× RELATED ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30 லட்சம்...