×

அதிமுக கூட்டணியில் தொடர்வதா? என 2 நாட்களில் முடிவு: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து 2 நாட்களில் தெரிவிக்க உள்ளோம் என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அதிமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து 2 நாட்களில் தெரிவிக்க உள்ளோம். அதிமுகவை கழட்டிவிட வேண்டும் எண்ணம் உள்ளது.

மேலும், மற்ற கட்சியினர் எங்களுக்கு சீட் கொடுக்க அழைத்தார்கள்; ஆனால் நாங்கள் போகவில்லை. ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது; தற்போது ஏமாற்றம் அளித்துள்ளதாக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது. பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றே விரும்புகின்றனர் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறினார்.

The post அதிமுக கூட்டணியில் தொடர்வதா? என 2 நாட்களில் முடிவு: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Revolutionary Party of India ,Poova Jeganmurti ,Chennai ,Adimuka alliance ,Revolution Bharat Party ,Poowa Jeganmurti ,Adimuga alliance ,Alliance ,Revolution Party ,Poovi Jeganmurthy ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...