×

அநீதிக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: அநீதிக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜக கூட்டணியில் இணைந்தார் முன்னால் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். அவர் பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். 15 தொகுதிகளை கேட்ட அவருக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் பாஜக ஒதுக்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று அவரது ஆதரவாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்; அநீதிக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன். இரட்டை இல்லை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாக வரும். நீதி கேட்டு ராமநாதபுரம் மக்களிடம் செல்கிறேன். மன்னர் சேதுபதி ஆளுகைக்கு உட்பட்ட ராமநாதபுரம் தொகுதி மக்கள் சரியான நீதி வழங்குவார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீதி வழங்குவார்கள் என்பது வரலாறு; அதனால் அங்கு போட்டியிடுகிறேன். அதிமுக தொண்டர்கள் உரிமைக்காக போராடுவதால் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

The post அநீதிக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Paneer Selvam ,Chennai ,BJP ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...