×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுக-வினர் போராட்டம்..!!

சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்றிரவு கைது செய்தது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கண்டித்து குரல்களை வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் சென்னை மாநகர மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் தயாநிதி மாறன் எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

*ரூ.7.5 லட்சம் கோடி பாஜக அரசு ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறியுள்ளது, அது பற்றி விசாரணை இல்லை என தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

*கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி திமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

*மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை தடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு சதி செய்கிறது.

*மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். என்றும் அவர் தெரிவித்தார்.

* முன்னதாக முதலமைச்சர் ஹேம்நாத் சோரன் கைது செய்யப்பட்டார். இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுக-வினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Dimug-Vinar ,Chennai ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Department ,Union State ,Dimuk- ,Vinar ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!